பிரதமர் மோடியை 2வது நாளாக சந்திக்க கோவளம் புறப்பட்டார் சீன அதிபர் ஷி ஜின்பிங்

பிரதமர் மோடியை 2வது நாளாக சந்திக்க  காரில் கோவளம் புறப்பட்டார் சீன அதிபர் ஷி ஜின்பிங்.
தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்திற்கு சீன அதிபர் ஷி ஜின்பிங் நேற்று வருகை தந்தார்.அங்கு சென்ற அவருக்கு  பிரதமர் நரேந்திர மோடி அங்குள்ள சிறப்புகளை எடுத்து விளக்கினார்.இதனைத்தொடர்ந்து இரு தலைவர்களும் அங்கு நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை கண்டுகளித்த பின்பு ஹோட்டலுக்கு சென்றார்கள்.
இந்த நிலையில் இன்று பிரதமர் மோடியை 2வது நாளாக சந்திக்க காரில் கோவளம் புறப்பட்டார் சீன அதிபர் ஷி ஜின்பிங்.சென்னை கிண்டி ஐடிசி சோழா ஓட்டலில் இருந்து ஜின்பிங் புறப்பட்டதையொட்டி சாலைகளில் தீவிர கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும் சீன அதிபர் ஜின்பிங் பலத்த பாதுகாப்புடன் கோவளம் செல்வதால் ஆங்காங்கே போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. கோவம் தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ் ஓட்டலை சென்றடைந்த பின்னர் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார் சீன அதிபர்.