மேச்சேரி – நங்கவள்ளி கூட்டு குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி…!

மேச்சேரியில் அதிக அளவில் பழங்கள் உற்பத்தி செய்யப்படுவதால், குளிர்பதன கிடங்குகள் அமைக்கப்படும் என்று  முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலத்தில் மேச்சேரி – நங்கவள்ளி கூட்டு குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி.

இதன் பின்னர் முதலமைச்சர் பழனிசாமி கூறுகையில், சொட்டு நீர் பாசனம், வேளாண் கருவிகளுக்கு அரசு மானிய உதவிகள் வழங்குகிறது.சேலம் ஓமலூரில் காய்கறி, பழச்சந்தை அமைக்கப்படும் . மேச்சேரியில் அதிக அளவில் பழங்கள் உற்பத்தி செய்யப்படுவதால், குளிர்பதன கிடங்குகள் அமைக்கப்படும் என்றும்  முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Leave a Comment