ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு : முன்ஜாமீன் மறுக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மேல்முறையீடு

டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில்  கைது செய்யாமலிருக்க முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் .இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்க  மறுப்பு தெரிவித்துவிட்டது.

இதனையடுத்து டெல்லி உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்க  மறுப்பு  தெரிவித்ததை அடுத்து உச்சநீதிமன்றத்தில்  ப.சிதம்பரம் மேல்முறையீடு செய்யவுள்ளார்.டெல்லி உயர்நீதிமன்றம் மேல்முறையீடு செய்ய 3 நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.