பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி தாக்குதல் இந்திய வீரர் பலி!

ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் இராணுவம் கடந்த சில நாள்களாக அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.அதற்கு இந்திய இராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் பூஞ்ச் மாவட்டத்தின் கிருஷ்ணா காடி செக்டார் பகுதியில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி  11 மணிக்கு தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் இந்திய இராணுவ வீரர் ஒருவர் உயிர் இழந்தார்.மேலும் சில இந்திய இராணுவ வீரர்கள் காயம் அடைந்தனர்.பாகிஸ்தான் இராணுவத்தின் இந்த அத்துமீறல் தாக்குதலில் இந்திய இராணுவம் தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு உள்ளது.

author avatar
murugan