ரூ.2000 சிறப்பு நிதி!!தடை விதிக்க சென்னை  உயர்நீதிமன்றம் மறுப்பு !!

ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதியுதவி திட்டத்துக்கு தடை விதிக்க சென்னை  உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது .

இது தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில், இந்த மாத இறுதிக்குள் ரூ.2000 பணம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.தமிழ்நாடு முழுவதும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இந்த பணம் கிடைக்கும்.60 லட்சம் பேர் பலனடைவார்கள் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.

Image result for 2000 ரூபாய்

இந்நிலையில் வறுமை கோட்டிற்கு கீழுள்ள குடும்பங்களுக்கு ரூ.2000 வழங்கும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தை சேர்ந்த செந்தில் ஆறுமுகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தார்.மேலும் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஓட்டுக்கு லஞ்சம் கொடுக்கும் வகையில் திட்டம் இருப்பதாக மனுவில் குற்றச்சாட்டினார்.

இந்நிலையில் இன்று  விசாரணைக்கு இந்த வழக்கு  சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அதில்  ஏழை மக்களுக்கு ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதியுதவி திட்டத்துக்கு தடை விதிக்க சென்னை  உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது .மேலும்  சட்ட பஞ்சாயத்து இயக்கம் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.அதேபோல் அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று  சென்னை  உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது .

Leave a Comment