ப.சிதம்பரத்திற்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்…! சிபிஐ அதிரடி நடவடிக்கை…!

ஐஎன்எக்ஸ் நிறுவனம் மீது 305 கோடி ரூபாய் அந்நிய முதலீடு முறைகேடு வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் பா.சிதம்பரம் மற்றும் அவரது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்திக் சிதம்பரம் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கு  தொடர்பாக  முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் பா.சிதம்பரம் தரப்பில்  மனு கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் தரப்பில் கொடுக்கப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து , விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சிபிஐ தரப்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

ஆனால் ப.சிதம்பரம் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் ப.சிதம்பரம் வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் நான்கு முறை வந்து உள்ளனர்.இந்நிலையில் ப.சிதம்பரத்திற்கு எதிராக விமான நிலையங்களில் சிபிஐ லுக்-அவுட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

ப.சிதம்பரம் விமானங்கள் மூலம் வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க சிபிஐ அதிரடி நடவடிக்கையாக விமான நிலையங்களுக்கு லுக்-அவுட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

author avatar
murugan