சிதம்பரத்தின் முன்ஜாமின் மனுவை உடனே விசாரிக்க உச்சநீதிமன்ற  தலைமை நீதிபதி மறுப்பு

சிதம்பரத்தின் முன்ஜாமின் மனுவை உடனே விசாரிக்க உச்சநீதிமன்ற  தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மறுப்பு தெரிவித்துவிட்டார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் தரப்பில்  தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா மறுப்பு தெரிவித்து விட்டார்.மேலும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தார். ரமணா மறுப்பு தெரிவித்த நிலையில் சிதம்பரத்தின் முன்ஜாமின் மனுவை உடனே விசாரிக்க உச்சநீதிமன்ற  தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மறுப்பு தெரிவித்துவிட்டார்.

உச்சநீதிமன்ற  தலைமை நீதிபதி  அமர்வு  அயோத்தி வழக்கை தற்போது விசாரித்து வருகிறது.இதனால் சிதம்பரத்தின் முன்ஜாமின் மனுவை உடனே விசாரிக்க மறுப்பு தெரிவித்துவிட்டது. உணவு இடைவேளைக்கு பிறகு சிதம்பரம் தரப்பில் முறையீடு செய்யப்பட்டால் தலைமை நீதிபதி மனு மீதான முடிவெடுக்க வாய்ப்பு உள்ளது.