#BREAKING : உள்ளாட்சித் தேர்தல் – தேர்தல் ஆணையருக்கு எதிராக திமுக வழக்கு

  • தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. 
  • உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையருக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் திமுக அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.

உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீடு முறையை சரியாக பின்பற்றவில்லை என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் திமுக மற்றும் காங்கிரஸ் வழக்கு தொடரப்பட்டது.அந்த வழக்கில் உச்சநீதிமன்ற  தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு,   2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என தீர்ப்பளித்தது.மேலும் 9 புதிய மாவட்டங்களில் 3 மாதங்களுக்குள் வார்டு மறுவரையறை பணிகளை முடிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதன் பின்பு உள்ளாட்சித் தேர்தலுக்கு புதிய அறிவிப்பாணை வெளியிடப்பட்டது.இதனால் தமிழகத்தில் வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறுகிறது என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது .இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9 ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில் இன்றுடன் முடிவடைகிறது.

இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையருக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் திமுக அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கில், உச்சநீதிமன்ற உத்தரவுகளை மாநில தேர்தல் ஆணையம் முழுமையாக செயல்படுத்தவில்லை  என்றும் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி உள்ளாட்சித் தேர்தல் நடத்தவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.