இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு பாஜக  ஆதரவு – பொன்.ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு பாஜக  ஆதரவு அளிக்கும் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சரும்,பாஜக மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிக்களுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.இந்த நிலையில் இன்று சென்னை தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் பொன்.ராதாகிருஷ்ணனை  அமைச்சர் ஜெயக்குமார் சந்தித்தார்.இதன் பின்னர் முன்னாள் மத்திய நிதியமைச்சரும்,பாஜக மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்பொழுது அவர் கூறுகையில்,  நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு பாஜக  ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்தார்.மேலும் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுடன் பாஜக இணைந்து பணியாற்றும் .அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யும் வகையில் பாஜகவினர் மிகத் தீவிரமாக செயல்படுவர் என்றும் கூறினார்.