75 வயது ஆகிவிட்டதா ‘நோ’ சீட்! அரசியல் வாரிசுக்கும் ‘நோ’ சீட்! பாஜக திட்டவட்டம்!

மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானா என இரு மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் வருகிற அக்டோபர் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ள பிரதான கட்சிகள் கடுமையாக தயாராகி வருகின்றன. இதற்கான வேளைகளில் பிஜேபி கட்சி தீவிரமாக இறங்கியுள்ளது.

நேற்று இது குறித்து நடைபெற்ற செயற்கூட்டத்தில், மத்திய அமைச்சர் அமித்ஷா, செயல் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் தலைமையில் பாஜக நிர்வாகிகளுடன் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எட்டப்பட்டன. அதில், 75 வயது மேற்பட்ட கட்சிகாரர்களுக்கு தேர்தலில் சீட் கிடையாது. எனவும், அரசியல் வாரிசுகளுக்கும் சீட் கிடையாது எனவும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து சீட் ஒதுக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.