அரவக்குறிச்சி,ஒட்டப்பிடாரம் ,திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்

அரவக்குறிச்சி,ஒட்டப்பிடாரம் ,திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

நான்கு தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.இந்த நான்கு தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல், ஏப்ரல் 22ம் தேதி தொடங்கும்  என அறிவிக்கப்பட்டது.இன்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது.அதேபோல் அடுத்த மாதம் 19-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

அதேபோல்  திருப்பரங்குன்றம், சூலூர் உள்ளிட்ட 4 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் மோகன் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.அதேபோல் அரவக்குறிச்சி தொகுதியில்  அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் வேட்புமனுத் தாக்கல் செய்தார். திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் முனியாண்டி வேட்புமனு தாக்கல் செய்தனர்.

Leave a Comment