2 ஆண்டுகளுக்கு பிறகு அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது

சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
கடந்த 2017-ஆம் ஆண்டு அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது .அந்த கூட்டத்தில் அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கி  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பல்வேறு காரணங்களுக்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிமுக பொதுக்குழு கூட்டம்  நடைபெறாமல் இருந்தது.இந்தநிலையில் இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.அதன்படி இன்று  அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் தொடங்கியது. உள்ளாட்சி தேர்தல் மற்றும் கட்சி விதிகளில் மாற்றம் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.