சிறுமியை சித்தரவதை செய்த நடிகை…போலீஸ் வழக்கு பதிவு…!!

சிறுமியை வீட்டில் அடைத்து சித்திரவதை செய்த புகாரில் நடிகை பானுப்ரியா மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பிரபல நடிகை பானுப்ரியா தன்னுடைய வீட்டில் ஆந்திராவை சேர்ந்த ஒரு சிறுமியை வேலைக்கு வைத்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் சிறுமியின் தாய் தன்னுடைய மகளை நடிகை பானுப்ரியா கொடுமை செய்ததாக கூறி ஆந்திர மாநிலம் சாமரலக்கோட்டாயில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்திதார். அந்த புகாரில் தனது மகளுக்கு நடிகை பானுப்ரியா, முறையாக சம்பளம் தரவில்லை, தன்னுடைய மகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாகவும் கூறியிருந்தார்.

இதையடுத்து நடிகை பானுப்பிரியா மீது ஆந்திர போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் இவ்விகாரம் தொடர்பாக கூறிய நடிகை பானுப்ரியா, தனது வீட்டில் இருந்து நகை, பணம், செல்போன் மற்றும் ஐபேட் உள்ளிட்ட பொருட்களை அந்த சிறுமி திருடியதாகவும், அதை நான் திருப்ப கேட்டதுக்கு பொய்யான புகார் அளித்ததாகவும் கூறினார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment