இலங்கையில் சிக்கி தவித்த 713 இந்தியர்கள் கப்பல் மூலமாக தூத்துக்குடி வருகை!

இலங்கையில் சிக்கி தவித்த 713 இந்தியர்கள் கப்பல் மூலமாக தூத்துக்குடி துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்தியா முழுவதும் இந்த வைரசை அழிப்பதற்கு அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதானால், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் சிக்கி தவிக்கும் மக்கள் மீண்டும் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப இயலாமல் தவித்து வந்தனர். 

இந்நிலையில், இந்திய கடற்படைக்கு சொந்தமான ஜலஸ்வா என்ற கப்பல் மூலம் இலங்கையில், சிக்கி தவித்த 713 இந்தியர்கள் தூத்துக்குடி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர். இதில் 699 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். மற்றவர்கள் கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்தவர்கள். 

இவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்காக, துறைமுக வளாகத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இவர்களில் இலங்கையில் வடக்கு மாகாணம். கிழக்கு மாகாணங்களில் சிக்கி தவித்தவர்கள் மற்றும் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட மீனவர்கள் என பலதரப்பப்பட்டவர்கள் உள்ளனர். 

இந்நிலையில், இவர்கள் வரவேற்பதற்காக, தூத்துக்குடி  மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி மற்றும் மாவட்ட காவல்துறை காணப்பணிப்பாளர் ஆகியோர் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளனர். மேலும், இவர்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பதற்காக 30 பேருந்துகள் தயார் நிலையில் உள்ளது. 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.