10% இடஒதுக்கீடு எதிராக மனு: மத்திய அரசு 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவு

  • பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு
  • எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் மனு
  • மத்திய அரசு 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவு

10% இடஒதுக்கீடு தருவதற்கு எதிராக திமுக தொடர்ந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மத்திய அரசு 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு:

பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள பொதுப்பிரிவினருக்கு 10% கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட துறைகளில் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.மக்களவை மற்றும் மாநிலங்களவையில் கடந்த சில தினங்களுக்கு முன்னா் இந்த மசோதா மீது  விவாதம் நடைபெற்று குடியரசுத் தலைவா் ஒப்புதலுடன் சட்டம் இயற்றப்பட்டது.

எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் மனு:

ஜனவரி 18 ஆம் தேதி  பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு தருவதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் மனு தாக்கல் செய்தது. திமுக முதன்மைச் செயலர் ஆர்.எஸ். பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

மத்திய அரசு 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவு:

இந்நிலையில் இன்று  பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு தருவதற்கு எதிராக திமுக தொடர்ந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மத்திய அரசு 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் மத்திய அரசு வாதத்தில் ,திமுக அரசியல் நோக்கத்திற்காக வழக்கு தொடர்ந்துள்ளது.ஆர்எஸ் பாரதி நேரடியாக பாதிக்கப்படவில்லை, என்பதால் அவரால் பொதுநல வழக்கு தொடர முடியாது என்று வாதிட்டது.

Leave a Comment