விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ஆறுதல் …!!

`நாங்க இருக்கேன்  விஜய்!’ கவலைய விடுங்க  ரஜினி ஆறுதல்…

சென்னை ,

இரண்டு குழந்தைகளை விஷம் கொடுத்துக் கொன்ற அபிராமியின் கணவர் விஜய்யை, நடிகர் ரஜினிகாந்த் நேரில் அழைத்து ஆறுதல் கூறினார்.

சென்னை குன்றத்தூர் அருகே, பிரியாணிக் கடை நடத்திவரும் சுந்தரம் என்பவரின்மீது கொண்ட காதலால், பெற்ற குழந்தைகளை கொன்று விட்டு தப்பி செல்ல முயன்ற அபிராமியை காவல்துறையினர் கைது செய்து தற்போது புழல் சிறையில் அடைத்தனர்.

இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அபிராமியின் கணவர் விஜய்யை, நடிகர் ரஜினிகாந்த் போயஸ்கார்டனில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்து ஆறுதல் கூறியுள்ளார்.

விஜய்

அப்போது, விஜய்யின் கைகளைப் பற்றிக்கொண்டு, “எந்த ஆறுதலும், இந்தக் கொடிய நிலைமைக்கு மருந்தாகாது. மீண்டு வாருங்கள் விஜய்; ஆண்டவன் துணை இருப்பான். நாங்க இருக்கோம்” என்று கலங்கிய கண்களுடன் ரஜினி தெரிவித்துள்ளார். ரஜினியைக் கண்டதும் விஜய் மனக்குமுறலால் உடைந்து அழுதுள்ளார். இது தொடர்பாக விஜய்யிடம் பேசுகையில்,“நான் ரஜினியின் தீவிர ரசிகன். அதே போல என்னுடைய குழந்தைகளுக்கும் நடிகர் ரஜினிகாந்த் மிகவும் பிடிக்கும். அவரைப் போலவே பேசும், சைகைகளைச் செய்து காட்டும்” என்று உடைந்த குரலில் பேசினார் விஜய்…

DINASUVADU 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment