நீ பத்தினியா…உன் கற்பு உண்மையானதா…உ.பி-யில் கணவன் அரங்கேற்றிய கொடூரம்…!!

கற்பை நிரூபிக்க பெண்ணின் கையை நெருப்பில் சுட்டதாக கணவரின் வீட்டார் மீது குற்றம்சாட்டப்படுகிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் பெண்ணின் நடத்தையில் நம்பிக்கையில்லை எனக் கூறி பெண்ணை அவரது கணவர் வீட்டார் பஞ்சாயத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்த மந்திரவாதி எரியும் நெருப்பில் கை வைக்குமாறும், சூடு படாதவர்கள் பொய் சொல்லவில்லை என அர்த்தம் எனவும் கூறியுள்ளார்.
முதலில் நெருப்பை நோக்கி கை வைத்த கணவர், சில நொடிகளில் கையை எடுத்துவிட்டதாகவும், அவரது மனைவி கைவைத்தபோது கணவர் வீட்டார் நீண்ட நேரம் கையை வைத்திருக்க வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
கையை நெருப்பிலிருந்து அகற்றாமல் கணவர் அழுத்தமாகப் பிடித்துக் கொண்டதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. இதில், கற்பை நிரூபிக்க நெருப்பில் நீண்ட நேரம் வலுக்கட்டாயமாக கையை வைத்திருந்த பெண்ணின் கைது வெந்து போனது. இதுகுறித்த படம் வைரலானதை அடுத்து போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
dinasuvadu.com 
author avatar
Dinasuvadu desk

Leave a Comment