ஜனவரி 2ம் வாரத்தில் துவங்கும் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர்…!

தமிழக சட்டப்பேரவை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் ஜனவரி 2ம் வாரத்தில் தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் முதல் நாள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றுகிறார். அரசு திட்டங்கள் மற்றும் கொள்கை முடிவுகள் அடங்கிய ஆளுநர் உரை மீதான விவாதம் 3 நாட்கள் வரை நடைபெறும் என்று கூறப்படுகிறது. இந்த கூட்டத்தொடர் பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே நிறைவடையும் என்றும் கூறப்படுகிறது. மேலும், தமிழகத்தில் புதிய ஆளுநராக பொறுப்பேற்ற பிறகு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முதல் கூட்டத்தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது

author avatar
Dinasuvadu desk

Leave a Comment