சுதந்திரப்பறவை சோபியா பெயிலில்..! அரசியல்வாதிகள் ஏன் வெளியில்..!விமர்சிப்பது குற்றமெனில்..! அரசியல்வாதிகளும் குற்றவாளிகளே..!கமல்ஹாசன் அதிரடி கருத்து..!!

ஆராய்ச்சி மாணவி சோபிய கைது நடவடிக்கைக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன.இந்நிலையில் நடிகரும்,மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன் தனது ட்வீட்டர் பக்கத்தில் மாணவி சோபியா விவகாரம் குறித்து பதிவிட்டுள்ளார்.

அதில் பொது இடங்களில் குரல் எழுப்புவதும்,விமர்சிப்பதும் குற்றமெனில் அத்தனை அரசியல்வாதிகளும் கைது செய்யப் படவேண்டிய குற்றவாளிகளே என்று பதிவிட்டுள்ளார்.மேலும் சுதந்திரப்பறவை சோபியாவை சிறையிலிருந்து பெயிலில் எடுக்கிறோம். அரசியல்வாதிகள் ஏன் வெளியே திரிகிறார்கள்? நானும் அரசியல்வாதி தான் என்பதை உணர்ந்தே சொல்கிறேன் என்று  கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.

இந்நிலையில் பாஜகவிற்கு எதிராக தூத்துக்குடி விமான நிலையத்தில் கோஷமிட்ட மாணவி சோவியாவிற்கு ஆதரவு குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.#சோபியா என்று இந்தியவில் ட்விட்டரில் தற்போது ட்ரண்டாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment