பேராயர் மூன்றாம் சார்லஸ் எல்லிஸ் அமெரிக்க பாப் பாடகி அரியானா கிராண்டேவை தவறான வகையில் தொட்டதற்காக மன்னிப்பு தெரிவித்துள்ளார்.
மிச்சிகன் மாநிலம் டெட்ராய்ட்டில் மறைந்த பிரபல பாடகி அரிதா ஃபிராங்ளினின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பாடகி அரியானா கிராண்டே, பாடல் மூலம் புகழஞ்சலி செலுத்தினார்.
பேராயர் மூன்றாம் சார்லஸ் எல்லிஸ் பாடல் பாடி முடிந்த பின், அவரை வாழ்த்துவதற்காக அழைத்த நிலையில் , கிராண்டேவை தகாத முறையில் தொட்டதாக புகார் எழுந்தது.இதனால் சமூக வலைத்தளங்களில் அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதற்கு வருத்தம் தெரிவித்துள்ள பேராயர் மூன்றாம் சார்லஸ் எல்லிஸ், தகாத முறையில் தொட வேண்டும் என்ற எண்ணத்துடன் தொடவில்லை என்று கூறியுள்ளார். கிராண்டேவிடமும், அவரது ரசிகர்களிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
DINASUVADU