காஷ்மீரில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த சி.ஆர்.பி.எப். வீரரின் உடல் அவரது சொந்த ஊரில் அடக்கம்!

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சி.ஆர்.பி.எப். வீரர் ராஜிந்தர் நெய்ன்.இவர்  காஷ்மீரின் புல்வாமா பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் வீரமரணமடைந்தார். காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கும் சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தனர்.இதில்  சி.ஆர்.பி.எப். வீரர் ராஜிந்தர் நெய்ன் என்பவரின் உடல் இறுதி சடங்கிற்காக அவரது சொந்த ஊரான ராஜஸ்தான் மாநிலம் சுருவிற்கு கொண்டு வரப்பட்டது.இறுதி சடங்கிற்கு பின்னர் அவரது உடல் முழு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும்.
source: dinasuvadu.com
 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment