அமிர்தசர் குண்டு வெடிப்பு ….தீவிரவாதிகள் 2 பேர் கைது…!!

அமிர்தசர் வெடி குண்டு தாக்குதல் சம்பவத்தில் தீவிரவாதிகள் என சந்தேகப்படும் 2 பேர் கை து செய்யபட்டு உள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசுக்கு அருகே ராஜாசான்சியில் வழிபாட்டு தலத்தில் பயங்கர சத்தத்துடன் வெடித்து  3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.இது பரபரப்பை ஏற்படுத்தியது.ஜெய்ஷ்–இ–முகமது இயக்கத்தை சேர்ந்த சுமார் 7 பயங்கரவாதிகள் மாநிலத்தில் நுழைந்திருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து பஞ்சாப் முழுவதும் முழு உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இத்தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.குண்டுவெடிப்பிற்கு ஒரு மணி நேரம் கழித்து, பஞ்சாப் போலீசார்  பதிண்டாபகுதியில் இரண்டு சந்தேக நபர்களை கைது செய்தனர்.
dinasuvdau.com
author avatar
Dinasuvadu desk

Leave a Comment