ஆளுநருக்கான மரியாதையை கொடுக்கத்தான் வேண்டும் – ஆளுநர் தமிழிசை

ஆளுநருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்கத்தான் வேண்டும் என ஆளுநர் தமிழிசை பேட்டி. 

இன்று அண்ணலை அம்பேத்கரின் நினைவு தினம் அனுசரிக்கப்படும் நிலையில், ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் சென்னையில் அம்பேத்கர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ஆளுநருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்கத்தான் வேண்டும். எந்த பிரச்சினையாக இருந்தாலும் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். முழுமையாக ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் எனக் கூறுவது சரியல்ல என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment