ஆர்வத்தையும் திறனையும் வளர்த்துக் கொண்டால் எத்துறையிலும் பிரகாசிக்கலாம் – டிடிவி தினகரன்

பொதுத்தேர்வுகளில் தேர்ச்சிப் பெற்று சாதனை புரிந்த மாணவக் கண்மணிகளுக்கு என் அன்பு நிறைந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என டிடிவி தினகரன் ட்வீட். 

இன்று மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து டிடிவி தினகரன் ட்வீட் செய்துள்ளார்.

அந்த ட்விட்டர் பதிவில், ’10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சிப் பெற்று சாதனை புரிந்த மாணவக் கண்மணிகளுக்கு என் அன்பு நிறைந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். வாழ்வின் அடுத்த கட்டத்தில் அடியெடுத்து வைக்கும் மாணவ, மாணவியர்கள் எதிர்காலப் பாதையை நன்று சிந்தித்து, நிதானித்து தேர்வு செய்திட வேண்டும்.

ஆர்வத்தையும் திறனையும் வளர்த்துக் கொண்டால் எத்துறையிலும் பிரகாசிக்கலாம். இதனைச் அன்புச் செல்வங்கள் கருத்தில் கொண்டு எதிர்காலத்திற்கான கல்வியை தேர்வு செய்திட வேண்டும். இத்தேர்வுகளில் தேர்ச்சி வாய்ப்பை இழந்தவர்கள் மனச்சோர்வடையாமல் மீண்டும் முயற்சி செய்து சாதனை நிகழ்த்திட வேண்டும். எல்லா நலமும், வளமும், சாதனைகளும் நிறைந்த எதிர்காலம் மாணவச் செல்வங்களுக்கு அமைந்திட எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment