உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 249-க்கு ஆல் அவுட்..!

நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 249 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது.

சவுத்தாம்ப்டனில் இந்தியாவிற்கும் நியூசிலாந்திற்கும் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் மற்றும் 4-ஆம் நாள் ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, இன்று 5-வது நாள் ஆட்டம் 3 மணிக்கு பதில் மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 11 மணி வரை நடைபெறும் என பிசிசிஐ அறிவித்தது.

இந்நிலையில், இன்றை 5-ஆம் நாள் போட்டி தொடங்கும்போது 101 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டை இழந்த நியூசிலாந்து தனது முதல் இன்னிங்சிஸை மீண்டும் தொடங்கியது. இந்திய அணியின் பந்து வீச்சில் நியூசிலாந்து சற்று தடுமாற்றத்த்துடன் விளையாடியது. அணி மதிய உணவு இடைவேளை வருவதற்குள் 34 ரன்னில் 3 விக்கெட்டை பறி கொடுத்தது. இதனால், நியூசிலாந்து அணி உணவு இடைவேளை போது 135 ரன்னிற்கு 5 விக்கெட்டை இழந்தது.

பின்னர், தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி 249 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதனால் நியூஸிலாந்து அணியின் 32 ரன்கள் முன்னிலையில் உள்ள நிலையில், இந்திய அணி தனது 2-வது இன்னிங்சை தொடங்கி விளையாடி வருகிறது.

இந்திய அணியில் ஷமி 4 விக்கெட்டும், இஷாந்த் சர்மா 3 விக்கெட்டும், அஸ்வின் 2 விக்கெட்டும் பறித்தனர். இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 217 ரன்கள் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan