உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: 5-ஆம் ஆட்ட முடிவில் இந்திய அணி 32 ரன்கள் முன்னிலை..!

5 -ஆம் ஆட்ட முடிவில் இந்திய அணி 30 ஓவர் முடிவில் 2 விக்கெட்டை இழந்து 64 ரன்கள் எடுத்து 32 ரன்கள் முன்னிலையில் உள்ளனர்.

இங்கிலாந்தில் இந்தியாவிற்கும் நியூசிலாந்திற்கும் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் மற்றும் 4-ஆம் நாள் ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, 2-ஆம் போட்டி தொடங்கியது. இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 217 ரன்கள் எடுத்தனர்.  இன்று 5-வது நாள் ஆட்டம் இந்திய நேரப்படி மாலை 4 மணிக்கு தொடங்கியது.

இந்நிலையில், இன்றை 5-ஆம் நாள் போட்டி தொடங்கும்போது நியூசிலாந்து 2 விக்கெட்டை இழந்து 101 ரன்கள் எடுத்த நிலையில், நியூசிலாந்து தனது முதல் இன்னிங்சிஸை மீண்டும் தொடங்கியது. இந்திய அணியின் பந்து வீச்சில் நியூசிலாந்து சற்று தடுமாற்றத்துடன் விளையாடியது. இறுதியாக 99.2 ஓவரில்  நியூசிலாந்து அணி 249 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது.

இந்திய அணியில் ஷமி 4 விக்கெட்டும், இஷாந்த் சர்மா 3 விக்கெட்டும், அஸ்வின் 2 விக்கெட்டும் பறித்தனர். இதனால், நியூஸிலாந்து அணி 32 ரன்கள் முன்னிலையில் உள்ள நிலையில், இந்திய அணி தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது.

இந்திய அணியில் தொடக்க வீரர்களாக சுப்மான் கில், ரோஹித் இருவரும் களமிறங்கினர். சிறப்பாக விளையாடி வந்த ரோஹித் 81 பந்தில் 30 ரன்கள் எடுத்தார். அதில் 2 பவுண்டரி அடங்கும்.  நிதானமாக விளையாடி வந்த சுப்மான் கில் 8 ரன்னில் விக்கெட்டை இழந்தார். இவர்கள் இருவரும் டிம் சவுதிடம் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

இந்நிலையில், 5 -ஆம் ஆட்ட முடிவில் இந்திய அணி 30 ஓவர் முடிவில் 2 விக்கெட்டை இழந்து 64 ரன்கள் எடுத்து 32 ரன்கள் முன்னிலையில் உள்ளனர். தற்போது களத்தில் புஜாரா 12 மற்றும் கோலி 8 ரன்களுடன் இருவரும் உள்ளனர்.

author avatar
murugan