பெட்ரோல்,டீசல் விலை உயர்வா? – இன்றைய நிலவரம் என்ன?..!

சென்னை:112-வது நாளாக மாற்றமின்றி சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.40-க்கும்,அதைப்போல்,ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.91.43-க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை,எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.இதனால்,பெட்ரோல்,டீசல் விலையில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதுண்டு.

இந்நிலையில்,சென்னையில் கடந்த 2 மாதங்களும் மேலாக பெட்ரோல்,டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி தொடர்ந்து வரும் நிலையில்,112-வது நாளாக மாற்றமின்றி சென்னையில் இன்றும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.40-க்கும்,அதைப்போல், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.91.43-க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

அதே சமயம்,நேற்றிய விலையில் மாற்றமின்றி,டெல்லியில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ.95.41 மற்றும் டீசல் ரூ.86.67-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.மும்பையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.109.98 மற்றும் டீசல் ரூ.94.14-க்கும் விற்பனை.மேலும்,கொல்கத்தாவில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.104.67 மற்றும் டீசல் ரூ.89.79-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதற்கிடையில்,ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் போர் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் நேற்று முன்தினம் 2.03 சதவீதம் உயர்ந்துள்ளது.அதன் பிறகு விலை 97 டாலர்களை எட்டியுள்ளது. நிபுணர்களின் கூற்றுப்படி, கச்சா எண்ணெய் விலையில் அதிகரிப்பு இருக்கும். ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 100 வரை டாலர் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை ரூ.8 வரை உயர வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. பல்வேறு மாநிலங்களில் நடந்து வரும் சட்டசபை தேர்தல் காரணமாக எரிபொருள் விலை உயராமல் உள்ளதாக கூறப்படுகிறது.