மீண்டும் தமிழக மீனவர்கள் 22 பேர் கைது – இலங்கை கடற்படை அட்டூழியம்!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 22 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்சதீவு மற்றும் நெடுந்தீவு பகுதிகளில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி நாகை,காரைக்கால் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 22 பேர் இலங்கை கடற்படை கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும்,மீனவர்களின் இரண்டு விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது.கைதான 13 காரைக்கால் மற்றும் 9 நாகை மீனவர்களிடம் மயிலிட்டி துறைமுகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அடிக்கடி இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள்  கைது செய்யப்படுவது சக மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 23 நாட்களில் இதுவரை 72 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதில் 21 பேர் மட்டுமே  விடுவிக்கப்பட்டுள்ளனர்  என்பது குறிப்பிடத்தக்கது.