சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கா? கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் விளக்கம்!

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்பது வதந்தி.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் இதுவரை, இந்த வைரஸ் பாதிப்பால், 34,194 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 307 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில், சென்னையில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருடன், சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்பது வதந்தி என்றும், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தடை செய்யப்பட்ட பகுதிகள் மட்டுமின்றி 15 மண்டலங்களிலும் தெருவுக்கு தெரு கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.