குளங்களை தூர் வாரினார்களோ இல்லையோ அரசு கஜானாவை தூர் வாரிவிட்டார் – டிடிவி தினகரன்

மக்கள் மற்றும் இயற்கையை பாதிக்கும் திட்டங்களை அனைத்தும் தமிழகத்தில் வந்ததற்கு காரணம் திமுக என்று டிடிவி தினகரன் குற்றசாட்டு.

தேவகோட்டையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளரை ஆதரித்து பரப்புரையில் பேசிய அக்கட்சி பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், திமுகவை நம்பினால் யாராக இருந்தாலும் சாலையில் தான் நிற்க வேண்டும் என்றும் திமுக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் நில அபகரிப்பு, கட்டப் பஞ்சாயத்து அதிகரித்து விடும் எனவும் விமர்சித்துள்ளார்.

மக்கள் மற்றும் இயற்கையை பாதிக்கும் திட்டங்களை அனைத்தும் தமிழகத்தில் வந்ததற்கு காரணம் திமுக தான் என குற்றசாட்டியுள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி பச்சோந்தி, காலில் விழுந்தே பதிவியை வாங்கியவர் என்றும் ஏரி குளங்களை தூர் வாரினார்களோ இல்லையோ அரசு கஜானாவை தூர் வாரிவிட்டார் எனவும் விமர்சித்து பேசியுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்