எதுவாக இருந்தாலும், நாங்கள் வாழ்க்கையில் நண்பர்களாக இருப்போம்!

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனானது, பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.

இதனையடுத்து, இந்நிகழ்ச்சியில் இருந்து பாத்திமா பாபு, மோகன் வைத்யா, வனிதா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்ஷி, அபிராமி ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட அபிராமி, தனது தோழியான சாக்ஷியை சந்தித்துள்ளார்.

இவர்கள் இருவரும் இணைந்து எடுத்த புகைப்படத்தை சாக்ஷி தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டு, ‘ எதுவாக இருந்தாலும், நாங்கள் வாழ்க்கையில் நண்பர்களாக இருப்போம்’ என்று பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.