‘பொன்னையன் பேசியது உண்மை’ – ஆதாரத்தை வெளியிட கோலப்பன்..! நடந்தது என்ன?

பொன்னையன் பேசியது உண்மை என கோலப்பன் செய்தியாளர்களுக்கு பேட்டி. 

அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான பொன்னையன் அதிமுக தலைவர்களை விமர்சித்து பேசுவதாக ஓபிஎஸ் ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி நேற்று செய்தியாளர் சந்திப்பின்போது ஆடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இது பெரும் சர்ச்சையான நிலையில் இந்த ஆடியோ தான் பேசியதில்லை என பொன்னையன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பொன்னையன் கூறுகையில், அதிமுக நிர்வாகி கோலப்பன் உட்பட யாரிடமும் தான் பேசவில்லை என்றும், தொழில்நுட்பத்தை பயன்படுத்தி என் குரல் மிமிக்ரி செய்யப்பட்டுள்ளது. தற்போது வெளியாகி உள்ள ஆடியோ போலியானது. எடப்பாடி பழனிசாமி மற்றும் கே.பி.முனிசாமி அவர்கள் மீது எனக்கு மிகப்பெரிய ம மரியாதை உள்ளது என்று அவர் தெரிவித்திருந்தார்.

இதுநிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கன்னியாகுமரி அதிமுக நிர்வாகி கோலப்பன், பொன்னையன் என்னிடம் பேசியது உண்மைதான். ஆனால் தற்போது அதை மறுத்து பேசுகிறார். இதையெல்லாம் மிமிக்ரி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அவர் என்னிடம் பேசியதற்காக ஆதாரம் உள்ளது. எனவே இதை மறுக்க முடியாது.

ஜூலை 9ஆம் தேதி, இரவு 9:59 மணிக்கு என்னுடன் பேசியுள்ளார். அதற்கான ஆதாரங்கள் இருக்கிறது. என்னுடைய கால் ரெக்கார்டை பார்த்தாலே அது தெரிந்துவிடும். அதை தேவைப்படும் நேரத்தில் வெளியிடுவேன் என தெரிவித்துள்ளார். அதிமுகவில் ஏற்கனவே குழப்பமான சூழல் நிலவும் நிலையில் தற்போது பொன்னையன் பேசிய விவகாரமும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment