ராகுல்காந்திக்கு என்னதான் பிரச்சனை…? – மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

ராகுல் காந்தியின் ட்வீட்டர் பதிவிற்கு பதிலடி கொடுத்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன்.

காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி அவர்கள் கொரோனா தொற்று விவகாரத்தில் மத்திய அரசை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். அதிலும் மத்திய அரசின்  தடுப்பூசி கொள்கை குறித்து விமர்சித்து வரும் ராகுல் காந்தி அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஜூலை வந்துவிட்டது. தடுப்பூசி வரவில்லை. எங்கே தடுப்பூசி?’ என்று பதிவிட்டிருந்தார்.

இதனையடுத்து ராகுல் காந்தியின் ட்விட்டர் பதிவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஜூலை மாதத்திற்கான தடுப்பூசி தகவல்கள் குறித்து நான் ஏற்கனவே தகவல்களை வெளியிட்டு இருந்தேன். ராகுல் காந்திக்கு என்னதான் பிரச்சனை? அந்தத் தரவுகளை அவர் படிக்கவில்லையா? அவருக்கு புரியவில்லையா? ஆணவத்திற்கும் அறியாமைக்கும் தடுப்பு மருந்து கிடையாது. காங்கிரஸ் கட்சி தங்கள் தலைமையை மாற்றுவது குறித்து சிந்திக்க வேண்டும்.’ என்று பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.