நாட்டின் பொது மொழி எது ? நடிகர் ரஜினிகாந்த் கண்டிப்பாக விளக்க வேண்டும்-அமைச்சர் ஜெயக்குமார்

நாட்டின் பொது மொழி எது என்பதை நடிகர் ரஜினிகாந்த் விளக்க வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டார். அதில் ,இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.இவரது இந்த கருத்துக்கு எதிராக  தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

பின் இது குறித்து நடிகர் ரஜினிகாந்த்  கூறுகையில்,  பொதுவான மொழி என்று ஓன்று இருந்தால் அது நாட்டின் வளர்ச்சிக்கு நல்லது.துரதிஷ்டவசமாக இந்தியாவில் அதை கொண்டுவர முடியாது. இந்தி மொழியை திணித்தால் தமிழகத்தில் மட்டுமல்ல தென்னிந்தியாவில் யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்,ஏன் ஒரு சில வட இந்திய மக்கள் கூட ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்று தெரிவித்தார்.

இந்தநிலையில் சென்னை விமான நிலையத்தில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசினார் அமைச்சர் ஜெயக்குமார்.அப்பொழுது அவர் கூறுகையில்,நாட்டின் பொது மொழி எது என்பதை நடிகர் ரஜினிகாந்த் விளக்க வேண்டும் . தமிழ் மொழி, பொது மொழியாக அறிவிக்கப்பட்டால் அதை விட மகிழ்ச்சியான செய்தி எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.