தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள சட்ட மசோதா மூலம் விரைவில் நீட் அநீதிக்கு முற்றுப்புள்ளி வைப்போம் – சு.வெங்கடேசன்

தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள சட்ட மசோதா மூலம் விரைவில் நீட் அநீதிக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.

தமிழக சட்டப்பேரவை கூட்ட தொடரின் இறுதி நாளான இன்று, நீட் தேர்வுக்கு எதிரான சட்டமசோதா தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சட்ட பேரவையில் நீட் நுழைவு தேர்வுக்கு நிரந்தர விலக்கு கோரும் மசோதாவை தாக்கல் செய்தார்.

இதுகுறித்து, சு.வெங்கடேசன் எம்.பி. தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சமூக நீதியை உறுதி செய்யவும் சமத்துவம் மற்றும் சம வாய்ப்பை நிலைநிறுத்தவும் நீட் தேர்வினால் பாதிப்பிற்குள்ளாகும் அனைத்து மாணவர்களை பாதுகாக்கவும் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள சட்ட மசோதா மூலம் விரைவில் நீட் அநீதிக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.