நாம் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும்-உதயநிதி ஸ்டாலின்

நாம் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

திமுக இளைஞரணியில் உறுப்பினர்களை சேர்க்கும் பணிகள் கடந்த சில நாட்களாக மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் குறித்து உதயநிதி ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில். அதிக உறுப்பினர்களை சேர்த்துவிட்டோம் என அடுத்தடுத்த நாட்களில் சோர்வாக அமர்ந்துவிடக் கூடாது. மக்களையும், நாட்டையும் காப்பாற்ற வேண்டிய இடத்தில் உள்ள நாம் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.