ஊழல் நிறைந்த ஆம் ஆத்மியின் உண்மை முகத்தை வெளிப்படுத்தியுள்ளோம்.! டெல்லி பாஜக தலைவர் பதிலடி.!

ஊழல் நிறைந்த ஆம் ஆத்மி கட்சியின் உண்மை முகத்தை நாங்கள் வெளிப்படுத்தியுள்ளோம். – டெல்லி பாஜக தலைவர் ஆதேஷ் குப்தா.

டெல்லியில் அண்மையில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பாஜகவின் 15ஆண்டு கால உள்ளாட்சி அதிகாரத்தை டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி கைபற்றியது.

இதனை அடுத்து, டெல்லி துணை முதல்வர் மனோஜ் சிசோடியா தனது டிவிட்டர் பக்கத்தில், ஆம் ஆத்மி கவுன்சிலர்களை விலைபேச பாஜக ஆரம்பித்து விட்டது. அப்படி யாரேனும் தொடர்புகொண்டால் பதிவு செய்து வையுங்கள் என அவர் குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், டெல்லி பாஜக தலைவர் ஆதேஷ் குப்தா, ‘ மனோஜ் சிசோடியா ஏன் கவலைப்படுகிறார்? பாஜக ஜனநாயகம் மற்றும் அதன் சக்தி மீது நம்பிக்கை வைத்துள்ளது. ஊழல் நிறைந்த ஆம் ஆத்மி கட்சியின் உண்மை முகத்தை நாங்கள் வெளிப்படுத்தியுள்ளோம்.’  என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment