தண்ணீர் பிரச்னை பற்றி நாடாளுமன்றத்தில் பேச போதிய அவகாசம் தரவில்லை – திருமாவளவன்

தண்ணீர் பிரச்னை பற்றி நாடாளுமன்றத்தில் பேச போதிய அவகாசம் தரவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி  தலைவரும்,எம்.பியுமான திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களை திருமாவளவன்  சந்தித்தார் .அப்போது அவர் கூறுகையில்,தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்னையை மத்திய அரசு தீர்க்க வேண்டும் .தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்னை பற்றி நாடாளுமன்றத்தில் பேச போதிய அவகாசம் தரவில்லை. தண்ணீர் பிரச்னைக்கு தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என்று  திருமாவளவன் தெரிவித்துள்ளார்.