காபூல் விமான நிலையத்திலிருந்து பெற்றோர் இல்லாமல் குழந்தை மேற்கத்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டாரா?வீடியோ

காபூல் விமான நிலையத்திலிருந்து பெற்றோர் இல்லாமல் குழந்தை மேற்கத்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டது போன்ற காட்சி சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

ஆப்கானிஸ்தான் காபூல் விமான நிலையத்தில் இருந்து பெற்றோர் இல்லாமல் குழந்தை ஒன்று மேற்கத்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட காட்சி குறித்து பிரிட்டன் பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ்  தெரிவித்துள்ளதாவது, பெற்றோர் இல்லாமல் எந்த குழந்தையும் மீட்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இந்த குழந்தையின் பெற்றோர் இதற்கு முன்னரே மீட்கப்பட்டுள்ளதால் இந்த குழந்தையை ராணுவத்தினரிடம் வழங்கியுள்ளனர்.  மேலும், பெற்றோர் இல்லாமல் வயது வராதோரை அழைத்து செல்ல முடியாது. ஆப்கான் நாட்டை விட்டு வெளியேற பல ஆப்கான் நாட்டு மக்கள் முயன்று வருகின்றனர்.

இதனால் எங்களால் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் திணறுகிறோம். இதனை எப்படி சரி செய்வது என்பது குறித்து பிரிட்டன் ராணுவம் ஆராய்ந்து வருகிறது என்று கூறியுள்ளார்.