திரிபுரா தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திரிபுரா தேர்தலில் பெரும் முறைகேடுகள் நடந்துள்ளதாக  குற்றம்சாட்டியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் சுனீத் சோப்ரா கூறுகையில் ‘‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி நடைபெற்றுள்ளது. இதுகுறித்து ஏற்கெனவே நாங்கள் புகார் அளித்துள்ளோம். தேர்தல் ஆணையம் எங்களுக்கு பதில் சொல்லியே தீர வேண்டும்’’ எனக்கூறினார்.

திரிபுராவில் பாஜக முன்னிலை:

திரிபுராவில் தேர்தல் நடந்த 59 தொகுதிகளில் பாஜக 32 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. அதன் கூட்டணிக் கட்சியான திரிபுரா மக்கள் முன்னணி 7 இடங்களில் முன்னிலை வகிக்கின்றது. ஆளும் இடதுசாரி முன்னணி  19 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment