தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை ! குழுவை அமைத்தது தேமுதிக

தேமுதிகவில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு  5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தலில் தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டது.இந்தநிலையில் தமிழகத்தில் நீண்ட நாட்களாக நடைபெறாமல் இருந்த உள்ளாட்சித் தேர்தல் வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி என்று தேமுதிக தெரிவித்துள்ளது.இதனால்  தேமுதிக சார்பில் உள்ளாட்சி அமைப்பு தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு துணை செயலாளர் சுதீஷ் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.