உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்தில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பந்து அணிகள் விளையாடி வருகிறது.இந்த பந்து அணிகளில் முதல் நான்கு அணிகள் அரை இறுதிக்கு தகுதியை பெறும்.
தற்போது இந்திய அணி புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது.இந்நிலையில் அல் ரவுண்டர் விஜய் சங்கர் வலை பயிற்சியில் ஈடுபட்டு இருந்த போது இந்திய அணியின் வேக பந்து வீச்சாளர் பும்ரா வீசிய பந்தில் காலில் அடிபட்டதில் காயமடைந்தார்.
அதனால் நேற்று நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விஜய் சங்கர் கலந்து கொள்ள முடியவில்லை.விஜய் சங்கர் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இரண்டு விக்கெட்டை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற பெறும் உதவியாக இருந்தார்.
இந்நிலையில் காயம் காரணமாக அல் ரவுண்டர் விஜய் சங்கர் உலகக்கோப்பையில் இருந்து விலகி உள்ளார்.விஜய் சங்கருக்கு பதிலாக மயங்க் அகர்வால் அணியில் இடம் பெறுவார் என தகவல்கள் பரவி வருகிறது.