வேறு சொத்துக்களை பறிக்க கூடாது !விஜய் மல்லையா தொடர்ந்த வழக்கு ஆகஸ்ட்  2-ஆம் தேதி விசாரணை

வேறு சொத்துக்களை பறிமுதல் செய்யக்கூடாது என்ற விஜய் மல்லையாவின் வழக்கினை உச்சநீதிமன்றம் ஆகஸ்ட் 2 ஆம் தேதி விசாரிக்கிறது.

இந்திய வங்கிகள் பலவற்றில் ரூ.9000 கோடிக்கும் மேலாகக் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாததால் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட விஜய் மல்லையா, தற்போது லண்டனில் உள்ளார்.

இங்கிலாந்து நாட்டில் தஞ்சமடைந்துள்ள அவரை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இதுதொடர்பான வங்கிகளின் வழக்கு விசாரணை லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்றது. விஜய் மல்லையாவை, இந்தியாவுக்கு அனுப்புவது குறித்த வழக்கில் இறுதி தீர்ப்பை டிசம்பர் 10 ஆம் தேதி  நீதிமன்றம் வழங்கியது.பின் லண்டனில் இருந்து இந்தியாவுக்கு  விஜய் மல்லையாவை அனுப்ப பிரிட்டன் நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.இதை எதிர்த்து விஜய் மல்லையா மேல்முறையீடு செய்துள்ளார்.வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில்  விஜய் மல்லையா சார்பில் உச்சநீதிமன்றத்தில் தனது சொத்துக்களை முடக்கியதற்கு எதிராகவும்,கிங் ஃ பிஷர் நிறுவன சொத்துக்களை தவிர, மேற்கொண்டு சொத்துக்களை முடக்க தடை கோரி வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.அவரது வழக்கை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் ஆகஸ்ட்  2-ஆம் தேதி விசாரிக்கப்படும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.