#BREAKING: நாளை முதல் தினமும் காலை 7மணி முதல் 1 மணி வரை வீடுகளுக்கே காய்கறி விநியோகம்..!

நாளை முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வரவுள்ள நிலையில் தினமும் காலை 7 மணி முதல் பகல் 1 மணி வரை வாகனங்கள் மூலம் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்படயுள்ளது.

தமிழகத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வரவுள்ள நிலையில், முழு ஊரடங்கு நாட்களில் காய்கறி, பழங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. காய்கறி மற்றும் பழங்கள் விநியோகம் தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ள தொலைபேசி எண் அறிவிப்பு 044 22253884 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

காலை 7 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பொதுமக்களுக்கு காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்படும் எனவும் உள்ளாட்சி துறை மற்றும் கூட்டுறவுத் துறை இணைந்து காய்கறிகள், பழங்கள் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காய்கறிகள் மற்றும் பழங்கள் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்து வாகனங்கள் மூலம் விநியோகிக்கப்படும்.

முழுஊரடங்கு காலத்தில் சென்னை மாநகரில் 1610 வாகனங்களும், தமிழகத்தின் பிற பகுதிகளில் 2228 வாகனங்கள் மூலம் காய்கறி மற்றும் பழங்கள் தினசரி விநியோகம் செய்யப்படவுள்ளது.

author avatar
murugan