முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 25 அடி உயர சிலையை திறந்து வைத்த இந்நாள் பிரதமர் மோடி!

  • முன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பாயின் 95வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. 
  • இதனை தொடர்ந்து லக்னோவில் வாஜ்பாய் சிலையை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

மறைந்த முன்னாள் இந்திய பிரதமரும் பாஜக தலைவருமான வாஜ்பாய் அவர்களின் 95 வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு லக்னோவில் லோக்பவன் எனுமிடத்தில் வாஜ்பாயின் 25 அடி உயர சிலை திறக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிலையை திறந்து வைத்தார். இந்த விழாவில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், உத்திர பிரதேச கவர்னர் ஆனந்தி பென் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும், லக்னோவில் வாஜ்பாய் பெயரில் அமையவுள்ள மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டுவிழாவும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.