ஆரோக்கிய சேது செயலியை மொபைலில் பயன்படுத்துங்கள் – பிரதமர் மோடி!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரக் கூடிய நிலையில் இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு 21 நாட்களுக்கு போடப்பட்டு இருந்தது. இன்று ஊரடங்கு இந்தியாவில் முடிவடையும் நிலையில் இன்று காலை 10 மணியளவில் பிரதமர் மோடி மக்களுக்கு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், வைரஸ் பரவாமல் இருப்பதற்காக மே 3ஆம் தேதி வரை மேலும் இந்த ஊரடங்கை நீட்டிக்க போவதாகவும் ஏப்ரல் 20க்கு பிறகு சற்று விதிமுறைகளின்படி தளர்த்தப்படும் எனவும் கூறியிருந்தார்.
அதன் பின்பு வீட்டில் உள்ள முதியவர்கள் கவனமாக இருக்கவும் சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் கொரோனாவை கண்டறியக்கூடிய ஆரோக்கிய சேது எனும் மொபைல் செயலியைப் செல்போனில் மக்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும் என்றும் இந்திய பிரதமர் மோடி அவர்கள் தெரிவித்துள்ளார்.

author avatar
Rebekal