அமெரிக்கா : முழுமையாக தடுப்பூசி எடுத்துக்கொண்ட நபருக்கு ஓமைக்ரான் பாதிப்பு …!

அமெரிக்காவில் முழுமையாக தடுப்பூசி எடுத்துக்கொண்ட நபருக்கு ஓமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

உருமாறிய கொரோனாவாகிய ஓமைக்ரான் எனும் வைரஸ் தென் ஆப்பிரிக்க நாடுகளில் அதிகளவில் பரவி வருகிறது. இந்நிலையில் இந்த வைரஸ் 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளதால் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் இந்த ஓமைக்ரான் வைரஸ் அமெரிக்காவுக்குள்ளும் நுழைந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது ஆப்பிரிக்க நாடான கலிபோர்னியாவில் இருந்து அமெரிக்காவிற்கு திரும்பி வந்த ஒருவருக்கு இந்த வைரஸ் தொற்று உறுதியாக உள்ளதாகவும், அந்த நபர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதுடன், அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட நபர் முழுமையாக தடுப்பூசி எடுத்து கொண்டவர் எனவும் ,அவருக்கு லேசான அறிகுறி மட்டுமே இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Rebekal