உ.பி பாஜக உள்ளூர் தலைவரின் தம்பி சுட்டுக்கொலை.! 5 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்.!

உத்திர பிரதேச உள்ளூர் பாஜக தலைவர் போலா சௌராசியாவின் சகோதரர் சுட்டுக்கொல்லப்பட்டார்.  

உத்தரபிரதேச மாநிலம் மௌவில் உள்ளூர் பாஜக தலைவர் போலா சௌராசியாவின் சகோதரரான அபிமன்யு சௌராசியா என்பவர் இன்று சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

22 வயதான அபிமன்யு சௌராசியா இளைஞர் சுட்டு கொல்லப்பட்டது குறித்து காவல்துறை கூறுகையில், சௌராசியாவின் வலது கை, உள்ளங்கை மற்றும் இடுப்பில் மூன்று இடங்களில் துப்பாக்கியால் சுட்டதற்கான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

மேலும், மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர்  கொண்ட கும்பல் அபிமன்யு சௌராசியா மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த கொலைகார கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment