#FakeNews: மத்திய சுகாதாரத்துறை பெயரில் பரவிய போலியான தகவல்கள்.!

மத்திய சுகாதாரத்துறை பெயரில் பரவிய சர்வதேச பயணிகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் போலியானது.

கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், சர்வதேச பயணிகளுக்கு கொரோனாவுக்கான புதிய வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டதாக இன்று காலை தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை பெயரில் பரவிய சர்வதேச பயணிகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் போலியானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு வரும் பயணிகளின் கொரோனா சோதனை குறித்த செய்தி சமூக ஊடக தளங்களில் பரவி வருகிறது. இது தவறான தகவல் என்று கூறப்பட்டுள்ளது.

சர்வதேச பயணிகளுக்கு கொரோனாவுக்கான பரவிய போலியான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் இதோ: சர்வதேச பயணிகளுக்கு கொரோனாவுக்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட மத்திய அரசு.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment