35-வது மாவட்டமாக உதயமானது திருப்பத்தூர்

தமிழகத்தின் 35வது மாவட்டமாக திருப்பத்தூர் உதயமானது.
தமிழகத்தில்  மிகப்பெரிய மாவட்டமாக இருந்த வேலூர்  திருப்பத்தூர் , ராணிப்பேட்டை என்று இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.இதனால் திருப்பத்தூர் , ராணிப்பேட்டையை புதிய மாவட்டமாக உருவாக்கப்படுவதற்கான அரசாணை வெளியிட்டப்பட்டது.
இதனால் திருப்பத்தூர் , ராணிப்பேட்டை மாவட்டங்களில் துவக்‌க விழா நடைபெற்றது. முதலாவதாக தமிழகத்தில் 35-வது மாவட்டமாக திருப்பத்தூரை அங்கு உள்ள டான்பாஸ்கோ மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் தொடக்க விழாவில்  முதலமைச்சர்  பழனிசாமி அவர்கள் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இந்த விழாவில் விழாவில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் பங்கேற்றனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வருவாய் கோட்டங்கள்:
  • திருப்பத்தூர்
  • ஆம்பூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தாலுகாக்கள்:
  • திருப்பத்தூர்
  • நாட்டறம்பள்ளி
  • வாணியம்பாடி
  • ஆம்பூர்